Saturday, July 31, 2010


நண்பர்களே...
வணக்கம். தமிழ்த்தென்றல் மூலம் தங்களைத் தொடர்பு கொள்வதில் இணையற்ற மகிழ்ச்சி. எத்திசையும் புகழ் மணக்கும் முத்தமிழ்த்தாயின் மடியில் தவழும் குழந்தைகள் நாம். எம் தாய்க்கு எம்மால் இயன்ற அணிகளை அளிக்கின்றோம். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று முழங்கிய முண்டாசுக் கவிஞனின் வாக்குக்கிணங்க எங்கள் ஓசைகளை இணையத்தின் மூலம் தங்கள்முன் வைக்கிறோம். படியுங்கள். களியுங்கள். தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவியுங்கள். உங்கள் உதவியோடு தமிழ்த்தாய்க்குப் பெருமை சேர்க்க எம்மால் இயன்ற பங்களிப்பைத் தருகிறோம்.
நன்றி.
ஆசிரியர் குழு.
தொடர்புக்கு : thamizhthendral.minithazh@gmail.com